
சேதனப்பசளைகள் தொடர்பாக இலங்கையுடன் முரண்பட்ட சீன நிறுவனம், முறைப்படி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளது.
ஞiபெனயழ ளுநயறin டீழைடழபiஉயட புசழரி ஊழ., டுவன நிறுவனம், கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்னர், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டில், ஐக்கிய நாடுகளின் உணவு அமைப்பு, தலையிட்டு, இலங்கையிடம் இருந்து இழப்புக்களை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும், தமது நிறுவனம் தொடர்பான புரிதலை அகற்றவேண்டும் என்றும் சீன நிறுவனம் கோரியுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் பசுமை விவசாய உற்பத்தி திட்டம் தொடர்பில் இலங்கையின் சில பல்கலைக்கழக பேராசிரியர்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துக்கொள்கிறார்கள் என்றும், அவர்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் சோதனை அறிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் சீவின் நிறுவனம், இலங்கைக்கு எடுத்து வந்த சேதனப்பசளைகளில் பயிர்களுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய பக்றீரியா இருப்பதாக கூறி, இலங்கை அதனை ஏற்க மறுத்தது.
எனினும் அதற்கு முன்னதாக வங்கி நாணயக்கடிதத்தை இலங்கை திறந்தமை காரணமாக, கப்பலில் கொண்டு வரப்பட்ட சேதன பசளைகளுக்கான கொடுப்பனவை இலங்கை செலுத்தி நேரிட்டது.
இதனையடுத்து மீண்டும் சீனாவுக்கு குறித்த பசளையை எடுத்துச்சென்று தொற்று நீக்கி மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர சீன நிறுவனம் இணங்கியுள்ளது.
இந்தநிலையில் குறித்த இணக்கங்கள் ஏற்படுவதற்கு முன்னரே சீன நிறுவனம், ஐக்கிய நாடுகளில் நிறுவனத்தில் முறையிட்டுள்ளது.