
மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களின் மூன்று பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், போதைப் பொருட்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக மாத்தறை திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்வெல்ல நகரில், தங்கல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 122 கிராம் ஹெரோய்ன், டிஜிட்டல் தராசு என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 24 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி பிரதேசத்தில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 23 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோய்ன், 12 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 42 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவு, பள்ளிய பட்டுமக பிரதேசத்தில், கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 8 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொம்பனி வீதி பிரதேசத்தை சேர்ந்த 66 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.