
இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடலாக இது இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் திரு.அனுர திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.