300 கிலோ ஹெரோயின் கடத்தியவர்களை அடையாளம் கண்ட காவல்துறை

கொழும்பு, ஜனவரி 26: தெற்கு கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவும், இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 300 கிலோ ஹெரோயினுடன் இரண்டு இழுவை படகுகள் கடந்த திங்கள்கிழமை தெற்கு கடல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்போது 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துபாயில் பதுங்கியுள்ள மூன்று முக்கிய சந்தேக நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்த போதைப்பொருளைக் கடத்தியது தெரியவந்துள்ளது.

மூன்று பிரதான சந்தேக நபர்களும் நடுன் சிந்தகா அல்லது ஹரக் கதா, சரித் சண்டகெலும் அல்லது ரன் மல்லி மற்றும் திவான் பசிந்து அல்லது ஜோதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *