தோப்பூரில் பெரும்போக விளைச்சல் பெரும் நட்டம்! விவசாயிகள் கவலை

திருகோணமலை – தோப்பூர் கமநல சேவைக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் இம்முறை மேற்கொண்ட மழையை நம்பிய பெரும் போக நெற்செய்கையின் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், ஏக்கர் ஒன்றுக்கான விளைச்சல் சராசரியாக 10 மூடைகள் முதல் 20 மூடைகள் வரை கிடைக்கப் பெற்றதால் பெரும் நட்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் தாம் யூரியா பசளை பாவித்து நல்ல விளைச்சல் கிடைத்ததாகவும், எனினும், இம்முறை அரசாங்கம் யூரியா பசளையை தடை செய்தமையால் தமது விளைச்சல் குறைவடைந்துள்ளதாகவும் தோப்பூர் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாம் வங்கிகளில் நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் வேளாண்மை செய்து விளைச்சல் குறைவடைந்து நட்டமடைந்துள்ளதால் இந்நட்டத்திற்கு அரசாங்கம் விவசாயிகளுக்கு நட்டயீட்டுத்தொகை தர வேண்டுமென தோப்பூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *