
கொழும்பு, ஜனவரி 26: இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட எம்.எம். சி.பெர்டினாண்டோ, தனது பதவியிலிருந்தும், CEB உறுப்பினர் பதவியிலிருந்தும் புதன்கிழமை ராஜினாமா செய்துள்ளார். நாட்டில் மின்சார நெருக்கடி நிலை நிலவும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு அவர் புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், 2022 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் CEBயின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.