புத்தளம் தள வைத்தியாசாலையின் வெளி நோயாளர் பிரிவிக்கு ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பெறுமதியான அத்தியவாசிய மருந்துகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் (Puttalam hospital Development Forum ) செயலாளரும் , சமூக ஆர்வலருமான எச்.எம்.எம். சபீக் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிசாரின் ஏற்பாட்டில் YWMA – SRI LANKA அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.
Paracetamol syrup, Itraconazole and Amoxycilin உள்ளிட்ட மருந்து பொருட்கள் வைத்தியசாலையின் பிரதம மருந்தாளர் பாத்திமா மாஜிதாவிடம் ஒப்படைக்கப்பட்டன.