டீசல் மற்றும் உலை எண்ணெய் இருப்பு இன்றைக்கு மட்டுமே போதுமானது – மின்சார சபை

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பு இன்றைக்கு மட்டுமே போதுமானதாக காணப்படுவதாக என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் தீர்ந்துவிடும் என லங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் கூறினார்.

இதேவேளை சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக மின் நிலையத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் இன்றைய தேவையை பூர்த்தி செய்யும் என அன்ட்ரூ நவமணி குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையின் புதிய பதில் பொது முகாமையாளராக சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் பேராசிரியர் ரொஹந்த அபேசேகர இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *