சர்வதேச கிரிக்கட் அரங்கிலிருந்து விடைபெறுவதாக அறிவித்தார் தில்ருவன் பெரேரா

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவன் பெரேரா அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தனது ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பயணத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கான சரியாக தருணம் இதுவென அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இன்னும் சிறிது காலம் உள்நாட்டு கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

39 வயதான தில்ருவன் பெரேரா இறுதியாக காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விளையாடியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *