
நமது பிரதமர் சுகவீனமாக உள்ளார் என நாம் கேள்விப்பட்டோம். எனவே அவர் குணமடைய இறைவனை வேண்டுகிறோம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாம் நன்கு அறிந்த விடயம் இவ் நாட்டில் உர பிரச்சனை பல வித களவுகள் குறிப்பாக சீனி, உரம் போன்றவற்றில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன.
இரசாயன உரம் நிறுத்தியது பிழையான விடயம். கடந்த ஆட்சியில் 1500 இருந்தது. இன்று 8000-12000 ரூபாய் வரை செல்கின்றது. இதனால் விவசாயிகளிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவற்றிற்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு ஏது பணம் எங்கிருந்து வருகிறது.
இழப்பீடு ஒன்று வழங்கும் போது அங்கு தவறு ஏற்பட்டுள்ளது அத் தவறிற்கு யார் தண்டனை பெற வேண்டும்.
நெல் விற்பனை குறையும் போது இங்கு சிறு விற்பனையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆனால் அதிக நெல் விற்பனை செய்யும் நெல் விற்பனையாளர்களிற்கு பாதிப்பு குறைவாக காணப்படும்.
இன்று நாட்டில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை இல்லாது போயுள்ளது என மேலும் தெரிவித்தார்.