விவசாய, கமநல காப்புறுதி சபையின் தலைவர் ராஜினாமா

கொழும்பு, ஜனவரி 26: விவசாய, கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர எபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிததத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் அண்மையில் கையளித்ததாக பிரேமச்சந்திர எபா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ‘விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையில் மனசாட்சிக்கு ஏற்ப பணியாற்ற முடியாத காரணத்தினால் பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானித்தேன்’ என்று அவர் தெரிவித்தார்.

இன்று முற்பகல், இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் எம்.எம். சி.பெர்னாண்டோவும் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *