
சைக்கிள் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையாக துவிச்சக்கரவண்டி பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, அனைத்து வீதிகளிலும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஒரு பாதையை ஒதுக்குவதுடன், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது பயணிக்கும் வாகனத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு அரசு ரூ.103.56 செலவழிக்க வேண்டும் என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
துவிச்சக்கரவண்டியை பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோமீட்டருக்கு 236.48 ரூபாவை மிச்சப்படுத்த முடியும் எனவும் அரசாங்கத்திற்கு 339.98 ரூபா இலாபம் கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.