
கொழும்பு, ஜனவரி 26:
ஹெரோயின் கடத்தல்காரர்கள் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகையை அதிகரிக்கும் முன்மொழிவை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் (PNB) பொலிஸ் மா அதிபரிடம் வைத்துள்ளது.
இதன்படி, 10 முதல் 25 கிராம் ஹெரோயின் தொடர்பான தகவலை வழங்குபவர்களுக்கான வெகுமதியை ரூ. 5,000 இலிருந்து ரூ. 10,000 ஆகவும், 25 முதல் 50 கிராம் ஹெரோயின் தொடர்பான தகவலை வழங்குபவர்களுக்கான வெகுமதியை ரூ. 10,000 இலிருந்து ரூ. 20,000 ஆகவும், 50 முதல் 100 கிராம் ஹெரோயின் தொடர்பான தகவலை வழங்குபவர்களுக்கான வெகுமதியை ரூ. 20,000 இலிருந்து ரூ. 30,000 ஆகவும், 100 முதல் 250 கிராம் ஹெரோயின் தொடர்பான தகவலை வழங்குபவர்களுக்கான வெகுமதியை ரூ. 30,000 இலிருந்து ரூ. 50,000 ஆகவும், 250 முதல் 500 கிராம் ஹெரோயின் தொடர்பான தகவலை வழங்குபவர்களுக்கான வெகுமதியை ரூ. 40,000 இலிருந்து ரூ. 75,000 ஆகவும், 500 கிராம் முதல் 1 கிலோ ஹெரோயின் தொடர்பான தகவலை வழங்குபவர்களுக்கான வெகுமதியை ரூ. 50,000 இலிருந்து ரூ. 100,000 ஆகவும் அதிகரிக்க முன்மொழிந்துள்ளது.
மேலும், 1 கிலோ கிராமுக்கு கூடுதலாக மீட்கப்படும் ஹெரோயினுக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.