
புத்தளம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர் முஹம்மது ஷரீக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜமால்தீன் ஜௌசி, பாராளுமன்ற உறுப்பினரின் பத்துளுஓயா பகுதிக்கான அபிவிருத்தி குழுவின் தலைவர் முஹம்மது சியாம் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் முஹம்மது ஜெஸீர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புத்தளத்தில் இயங்கி வரும் BCMH அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் புத்தளம் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடமும் குறித்த வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

