வியாழேந்திரன் மீதான வழக்கு ஒத்திவைப்பு

ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் தலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த வியாழேந்திரன் உட்பட ஆறு பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், குறித்த வழக்கினை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *