வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு! ஒருவர் கைது

பதுளை, 6 ஆம் கட்டை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் சந்தேகநபர் வௌஸ்ஸ தோட்டப் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் வெவெஸ்ஸ தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை – 6 ஆம் கட்டை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து 60 வயதான பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *