திட்டமிட்டு காய் நகர்த்தும் சீனா: நீதியமைச்சர் இவ்வாறு சொல்வது ஏன்..??SamugamMedia

இலங்கை பொருளாதார பின்னடைவில் இருந்து மீள்வதற்கு சீனாவின் ஆதரவு இதுவரை கிடைக்காத நிலையில் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைப்பது தாமதமாவதால் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் குறித்து சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடவேண்டும் என கடந்த 2021ஆம் ஆண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் அப்போது மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றியவர் அதனை ஏற்க மறுத்ததால் அது தாமதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *