
நாட்டில் பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தும் வைக்கோல் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில் நெல் அறுவடை சீசனில் ஒரு கற்றை வைக்கோல், கிட்டத்தட்ட 5 கிலோவுக்கு மேல் 10 ரூபாக்கு விற்பனையாகியது.
இந்நிலையில் தற்போது ஒரு கிலோ வைக்கோல் 10 ரூபா என்று அதி உச்சவிலைக்கு விற்பனையாகி வருகின்றது.
இதன் காரணமாக கால்நடைகள் வைத்திருப்பவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.