யாழில் புதிய வீடானது உரிமையாளரிடம் கையளிக்கும் நிகழ்வு

குறைந்த வருமானத்தினை பெறுகின்ற குடும்பங்களிற்காக புதிய வீடுகள் வழங்கும் மேலைத்திட்டத்தின் இன்னுமோர் அத்தியாயமாக தலைக்கு நிழல் திட்டத்தின் கீழ் யாழ். அல்வாய் பகுதியில் வாழ்கின்ற பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக அமைக்கப்பட்ட புதிய வீடானது உரிமையாளரிடம் கையளிக்கும் நிகழ்வானது, இன்று யாழ். பாதுகாப்புப் பாடகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கஜீய செனரத் யாபா தலைமையில் நடைபெற்றது.

ஜே/400 அல்வாய் பிரதேசத்தில் வசிக்கும் அங்கவீனமான பெண்ணான தர்சன் யோகேஸ்வரி, குறித்த இல்லம் அமைப்பதற்கான பூரண நிதி அனுசரணையினை கொழும்பு நோயல் கல்லூரியின் 1980 ஆம் ஆண்டு (தமிழ்மொழி) பழையமானவர்கள் அணி வழங்கியிருந்ததுடன் வீட்டின் நிர்மாணப் பணியானது 351 காலாட் படைப்பிரிவின் நெறிப்படுத்தலின் கீழ் 4 ஆவது சிங்கப் படையணியினரின் சரீர உழைப்பில் நடைபெற்றது.

மேலும் குறித்த வீட்டிற்கு தேவையான சகல அத்தியாவசிய தபைடங்களும் மற்றும் உலருணவுப் பொதிகளும் யாழ்ப்பான பாதுகாப்பு படை கட்டனைத் தளபதியினால் வழங்கிவைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களது மேலதிக கல்விச் செயற்பாட்டிற்காக கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்திகழ்வில் 55 ஆவது படைப்பிரிவுத் தளபதி 551,552 படைப்பிரிவின் படைத்தளபதி, பருத்தித்துறை உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், பருத்தித்துறை பிரதேச செயலாளர் , இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *