
திடீர் சுகவீனம் காரணமாக 4 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு, சாந்தையைச் சேர்ந்த ரஷ்மிகா (வயது-4) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
நேற்றுக்காலை சிறுமிக்குத் திடீர் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, சங்கானை பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.