யாழ் நெடுந்தீவில், வாடிக்கு தீ வைத்த விசமிகள்! SamugamMedia

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியிலுள்ள கடற்றொழிலாளரின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதன்போது வாடியினுள் இருந்த கடற்றொழில் உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவு 2 ஆம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடுபவரின் வாடியே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *