புத்தளத்தில் மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்பு!SamugamMedia

புத்தளம் ஆனமடுவ கொதலகெமியாவ பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டு யானை மின்சாரம் தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த குறித்த காட்டு யானைக்கு மிருக வைத்தியர் டொக்டர் இசுரு என்பவரினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த காட்டு யானைக்கு 30 வயது எனவும் 8 அடி உயரம் எனவும் மதிக்கப்படுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
யானை உயிரிழந்தமைத் தொடர்பில் குறித்த காணி உரிமையாளரை நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து ஆனமடுவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மும்னெடுக்கப்பட உள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *