யாழில் பேடன் பவல் பிரவின் 166வது பிறந்த தின நிகழ்வு!SamugamMedia

சாரணிய ஸ்தாபகர் பேடன் பவல் பிரபு அவர்களின் 166வது பிறந்த தின நிகழ்வுகள் இன்று  யாழ் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் அதிபர் ப.கண்டீபன் தலைமையில்  நடைபெற்றது. 
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபரும் சாரண மாவட்ட ஆணையாளருமான  மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டார்.
அனைத்துப் பிரிவு சாரணர்களுக்கான போட்டி நிகழ்வுகளாக தமிழ்,ஆங்கில பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழுப்பாடல், வினாடிவினா ஆகியன இடம்பெற்றது. இதற்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
தலைமைக்காரியாலய ஆணையாளரும் வடக்கு கிழக்கு பயிற்சி இணைப்பாளருமாகிய திரு. ப. அஜித்குமார், இவர்களோடு உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரணத் தலைவர்கள், ஆசிரியர்கள், திரிசாரணர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *