தேர்தலை நடாத்த அரசிடம் போதியளவு நிதி இல்லையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
இந் நிலையில் தேர்தலை நடாத்த தன்னால் இயன்ற நிதி உதவியை வழங்குவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தை ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்” என எழுதி தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளை ஊடாக தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

The post தேர்தலை நடாத்த பணம் அனுப்பிய யாழ்பாணத்தை சேர்ந்த இளைஞன் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.