“அபயம்” அமைப்பால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

“அபயம்” அமைப்பால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டு உதவிகளை மேற்கொண்டுவரும் “அபயம்” அமைப்பால் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பதினோரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ சிகிச்சை உபகரணங்கள்(wheel Chair, spinal Board) வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு வைத்தியத்தியட்சகர் இரா.முரளிஸ்வரன் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது அப்யம் அமைப்பின் சார்பாக வைத்திய நிபுணர் பார்த்திபன் லண்டனில் இருந்து வருகை தந்து வைத்தியசாலை நிர்வாகத்திடம் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் Dr.J. மதன், தாதி உத்தியோகத்தர்கள், நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *