
நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதே ஒரே வழி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறி வருகிறார். இதனை விடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது பணத்தை இலங்கைக்கு அனுப்புவதை மேலும் அதிகரிப்பதன் மூலம் இந்த நெருக்கடியிலிருந்து இலகுவாக மீளலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.