தேர்தலை நடாத்துங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணம் அனுப்பிய யாழ் இளைஞன்!SamugamMedia

யாழ். சுண்டுக்குளியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு பணத்தினை அனுப்பியுள்ளார்.
அனைவரும் ஒத்துழைப்பு செய்வோம், தேர்தலை நடாத்த ஒத்துழைப்போம், சிறு துளி பெருவெள்ளம் ஆகட்டும், தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என கோரி அவர் இவ்வாறு பணத்தினை அனுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையகத்திற்கு தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் பணம் வழங்காத காரணத்தினால் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை இவ்வாறு அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *