
“தீர்வுகள் வேண்டி வக்பு சபையில் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் காலம் தாழ்த்தப்படாமல் இயன்ற அளவில் சுமுகமாக தீர்த்துவைக்கப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி கிழக்கு மாகாணம் போன்ற பிரதேசங்களிலிருந்து வருகை தரும் மக்கள் கொழும்பில் சிலநாட்கள் தங்க வேண்டியேற்படுகின்றமை தவிர்க்கப்படவேண்டும்’’ என புத்தசாசன, சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க புதிதாக நியமனம் பெற்றுள்ள வக்பு சபையின் தலைவர் மற்றும் அங்கத்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.