
செல்போன் மூலம் கொரோனாப் பரிசோதனை செய்யும் முறை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதுடன், குறைந்த கட்டணத்தில் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்துகொள்ளலாம்.
கொரோனாப்; பரிசோதனை முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை உள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கொரோனாப் பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
ஹார்மனி கொரோனாப் பரிசோதனை முறை என்று அழைக்கப்படும் இந்த முறையில், சார்ஸ் கோவ்-2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகின்றது.
ஒரு நிலையான வெப்ப நிலையில் இந்த சோதனை செய்யப்படுவதுடன், இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகின்றது.
20 நிமிடங்களில் முடிவையளிக்க கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது.