
கொழும்பு, ஜனவரி 27: சீமெந்து பதுக்கலைத் தடுக்கும் வகையில் சீமெந்து விநியோகஸ்தர்களிடம் சோதனை நடத்த கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த அமைச்சின் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவுக்கும், சீமெந்து தொழிற்துறையினர், மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, சீமெந்து விநியோகஸ்தர்களின் பட்டியலை தயாரித்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சு மூத்த அதிகாரி கூறுகையில் “சில விநியோகஸ்தர்கள் சீமெந்தை பதுக்கி சீமெந்து விலையை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.
இலங்கைக்கு மாதாந்தம் 500,000 மெற்றிக் தொன் சீமெந்து தேவை. உள்ளூர் சந்தையில் சுமார் 100,000 மெட்ரிக் தொன் பற்றாக்குறை உள்ளது. இதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்று ரூ.1500 தொடக்கம் ரூ. 1700 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.