
கொரோனாத் தொற்றுநோய்க்கு மத்தியில் இலங்கைக்குள் நுழையும் கொரோனா வைரஸின் எந்தவொரு புதிய பிறழ்வையும் நாட்டின் சுகாதார அமைப்பால் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சில தரப்பினரின் தவறான கருத்துக்கள் இருந்தபோதிலும், இலங்கையின் சுகாதாரத் துறைக்கு எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் உள்ளது.
போதிய படுக்கைகள் மற்றும் ஒட்சிசன் இருப்புக்கள் இல்லை என சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைப்பு எந்த வகையிலும் வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதி செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்;
சுகாதார அமைப்பை உகந்த வகையில் செயற்படவும், மக்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லாமல் சேவைகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.