சபுஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு எரிபொருள் வழங்கப்படும்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

கொழும்பு, ஜனவரி 27:

சபுஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தை இயக்கத் தேவையான எரிபொருள் வழங்கப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க கூறுகையில் “சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த மின் நிலையம் விரைவில் தொழில்படத் தொடங்கும். எனவே எதிர்வரும் வாரங்களில் நாட்டில் மின்வெட்டு ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில், தேவையான எரிபொருளை வழங்கினால் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும் என மின்சார சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *