இராணுவத்தினரை படம் பிடித்த மூன்று இளைஞர்கள் கைது! யாழில் சம்பவம்

யாழில் வெளிநாடு செல்லும் நோக்கில் இராணுவத்தினரை வீடியோப் படம் பிடித்த மூவர் பருத்தித்துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி ரோந்தில் ஈடுபட்ட இராணுவத்திரை திட்டுவது போன்று ஒருவர் பாசாங்கு செய்ய, இரு நண்பர்கள் அதனை படமாக்கியதாக இராணுவத்தினர் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில், மூன்று இளைஞர்களும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று இளைஞர்களிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டதும், இளைஞர்கள் விடுவிக்கப்படுவார்களா அல்லது நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்களா என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.

இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடைகள் குறித்து பிரிட்டன் ஆலோசனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *