வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மேம்படுத்த நடவடிக்கை- ரணில் உறுதி!SamugamMedia

இலங்கையை ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் தலமாக மாற்றுவதன் மூலம் சுற்றுலாத் துறையை மீண்டும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த வர்த்தக சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி ஹிக்கடுவ நகருக்கு விஜயம் செய்தார்.

வர்த்தகர்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகளை ஜனாதிபதி சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *