
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளாா்.
அந்த பதிவில்,
“ கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைவரையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளாா்.