
சிலாபம் ஆராச்சிகட்டுவ பகுதியில் உள்ள 3 ஆவது மாடி கட்டிடத்திலிருந்து இரண்டு துண்டுகளாக ஆக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்திலிருந்து பல நாட்களாக துர்நாற்றம் வீசியதையடுத்து பிரதேச வாசிகளால் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டிடத்தின் 3 ஆவது மாடியில் உள்ள அறை ஒன்றின் படுக்கையில் துண்டாக்கப்பட்டு சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.
ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.