உழவு இயந்திரத்தின் களப்பைக்குள் சிக்குண்டு இளைஞன் உயிரிழப்பு! SamugamMedia

திருகோணமலை –  தோப்பூரில் உழவு இயந்திரத்தின் களப்பைக்குள் சிக்குண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தர் தோப்பூர் – செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அமீர் அலி அஸாட் (வயது 17) என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த உழவு இயந்திர சாரதியும் உதவியாளராக இருந்த உயிரிழந்த இளைஞனும் வீடொன்றில் வைத்து உழவு இயந்திரத்தை சீர்செய்து கொண்டிருந்தபோது உழவு இயந்திரம் இயங்கியதில் பின்னால் இருந்த இளைஞன் களப்பை எனும் பகுதிக்குள் சிக்குண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் ஜனாஸா தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *