ஆசிரியர்களின் சம்பள விவகாரம்: நிதியமைச்சிடம் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அமைச்சரவை உப குழுவினால் தொகுக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை, நிதியமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த புதன்கிழமை, அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான முன்மொழிவுகளை பரிசீலித்ததாக அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை உப குழு தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் வாரம், அமைச்சரவைக் கூட்டத்தில் ,இந்த அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சரவை உப குழு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *