புலிகளை அழித்ததன் வலியை இந்தியா தற்போது உணர்ந்துள்ளது -அரசியல் ஆய்வாளர் கருத்து!SamugamMedia

கடந்த 2009ஆம் ஆண்டும் இலங்கையில் போர் இல்லாது ஒழிக்கப்பட்டதன் வலியை இந்தியா தற்போது உணர ஆரம்பித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரே இந்தோபசுபிக் என்ற விவகாரம் தலைதூக்கியதாகவும் சீனாவும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
தற்போது யுத்தம் இல்லாமல் போனதன் வலியை உணர்ந்துள்ள இந்தியா தற்போது பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதாக அ.நிக்சன் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்கள் எப்போதும் இந்தியாவை நம்புவதாகவும் ஆனால் இந்தியா சிங்களவர் பக்கமே நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிங்கள மக்கள் எப்போது இந்தியாவின் பக்கம் இருந்ததில்லை என்றும் சீனாவிற்கே சிங்களவர்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக அ.நிக்சன் குறிப்பிடுகின்றார்.

சீனாவுக்கு எதிராக ஒருபோதும் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது இல்லை என்றும் ஆனால் இந்தியாவுக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்ட செய்துள்ளதாக அ.நிக்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *