உகண்டாவில் ராஜபக்சர்களின் சொத்து – நாமல் வெளியிட்ட பகீர் தகவல்! SamugamMedia

ராஜபக்ச குடும்பத்தினர் முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களை அடையாளம் காட்டினால் அந்த சொத்துக்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ராஜபக்சர்கள் விமானத்தில் டொலர்களை நிரப்பி உகண்டாவிற்கு கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை யாராவது நிரூபித்து அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவந்தால், இலங்கையில் உள்ள அனைத்துக் கடன்களையும் அடைத்துவிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக ஆகிய கட்சிகள் ராஜபக்சவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வருவோம் என கூறினார்கள்.

ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது அவ்வாறான தகவல்கள் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

உலகில் எங்கும் ராஜபக்சர்களுக்கு இதுபோன்ற கணக்குகள் இருப்பதாக இதுவரை எந்தத் தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *