ரத்கம, ஓவகந்த பிரதேசத்தில் நேற்று (26) இரவு தாயும் மகளும் உறவினர் ஒருவரால் கத்தி குத்துக்கு இலக்காகி, மகள் உயிரிழந்ததுடன், தாயார் படுகாயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் உறவைப் பற்றிய வாக்குவாதம் முற்றியதையடுத்து இந்த கொடூர கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ரத்கம, ஓவகந்தவை வசிப்பிடமாகக் கொண்ட பாதுராகட ஷரமிலா லக்ஷானி (வயது 20) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
அவருக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் பிரதான சந்தேகநபர் ரத்கம பிரதேச சபையின் சிறு ஊழியர் எனவும் அவர் உயிரிழந்த பெண்ணின் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரின் 17 வயதுடைய மகன் கொலையுண்ட பெண்ணின் கணவனின் சகோதரியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அப்போது ஏற்பட்ட சண்டையில் சந்தேக நபர் கத்தியால் தாயையும் மகளையும் சரமாரியாக குத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.