ராஜபக்ச குடும்பத்தின் மீதான மக்கள் ஆதரவு சரிவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல் SamugamMedia

ராஜபக்சக்களுக்கான மக்கள் ஆதரவு 8% ஆகக் குறைந்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பல மடங்கு குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இனிமேல் 69 இலட்சம் என்ற கதை இந்நாட்டில் செல்லாது என்றும் கூறியுள்ளார்.

தமது வாழ்க்கையை அழித்தமைக்கு ராஜபக்சக்களே காரணம் என்பதை 92 வீதமான மக்கள், ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச சாபம் இங்கிருந்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *