அனுர உண்மையான 'டீல்'காரர்! பகிரங்க சவால் விடுத்துள்ள ஜோன்ஸ்டன்! SamugamMedia

வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் நாடாளுமன்றத்திற்கு தீவைக்க கூறிய லால் காந்தவிடமும், ஹந்துன்நெத்தியிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இது அனுரவின் டீல், இது எப்படி நடந்தது என முடிந்தால் அனுர பதில் கூறட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார்.

திஸ்ஸமஹாராம மகளிர் தொகுதி கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 2009ஆம் ஆண்டு அல்லது 2010ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற பிரதான கூட்டத்தில் உரை நிகழ்த்தினேன்.

அன்றும் நாம் மக்கள் விடுதலை முன்னணி பற்றிப் பேசினோம். இன்று பெருந்தொகையான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஜனநாயகம் பற்றி அநுரவின் கட்சியால் மாத்திரம் தான் பேச முடியுமா? அவ்வாறு நினைத்துத் தான் அவர் செயற்படுகிறார்.

அவர் அவதூறு பேசலாம், பொய் சொல்லலாம், கூட்டங்கள் நடத்தலாம், ஆனால் கூட்டம் நடத்தி நாம் ஏதாவது சொன்னால், அனைவரும் தம்மைக் குறை சொல்வதாக கூறுவார்.

மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றிய தலைவர் என்பதாலேயே இந்நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.

அவரை தெற்கில் இருந்து தான் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினீர்கள். தெற்கு மக்களுக்கு என்றென்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த 2005ஆம் ஆண்டில் 180,000 வாக்குகளால் வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2010ஆம் ஆண்டில் இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர் ஆற்றிய பணியினால் நாங்கள் வீதிகளை நிர்மாணித்தோம்.

அவரின் ஆட்சியில் நெடுஞ்சாலைகளை அமைத்தோம். இப்போது மக்கள் விடுதலை முன்னணிக்கு மூன்று நான்கு மணித்தியாலங்களில் கதிர்காமம் செல்லக்கூடிய நெடுஞ்சாலைகளை அமைத்தது அவர்தான்.

காலிமுகத்திடலில் வைத்து அடி, கொல்லு என்று அநுர திஸாநாயக்க கூறினார். பிரதமர் அலுவலகத்தை பிடித்தனர்.

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர். பிரதமரின் இல்லத்தை தீயிட்டு நாடாளுமன்ற சந்திக்கு சென்று லால்காந்த என்ன சொன்னார்.

நாடாளுமன்றத்தை சுற்றிவளைக்க சொன்னார். வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்டார். ஆனால் சுனில் ஹதுன்னெத்தியோ அல்லது லால்காந்தாவோ பொலிஸில் சென்று வாக்குமூலம் கொடுக்காது தப்பினர்.

இதற்கு அனுர திசாநாயக்க பதில் கொடுப்பாரா?, அநுர உண்மையான டீல்காரர். வசந்த முதலிகே மட்டும் சிறைக்கு சென்றார்.

லால்காந்தவும் சுனில் ஹந்துன்நெத்தியும் பொலிஸிக்குக்கு கூட செல்லவில்லை. முடிந்தால் இதற்கு பதில் சொல்லட்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *