வவுனியாவில் பேருந்து தரிப்பிடத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை

வவுனியா நொச்சிமோட்டை கிராம அலுவலகர் பிரிவிலுள்ள சாந்தசோலை பிரதான வீதியில் காணப்படும் பேருந்து தரிப்பிட நிழற்கூடை நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படுகின்றது .

இதனைப் புனரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு அப்பகுதி மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். கண்டி வீதியில் காணப்படும் சாந்தசோலை செல்லும் பிரதான பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிட நிழற்கூடை கடந்த சில தினங்களாக கூரை தகடுகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது .

இதனால் தற்போது காணப்படும் வெப்பமான காலநிலையினால் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருப்பவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த பேருந்து தரிப்பிட நிழற்கூடையை புனரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *