இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.