12-17 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி : பரிசோதனை செய்ய ஜோன்சன் என்ட் ஜோன்சன் நிறுவனம் விண்ணப்பம்!

இந்தியாவில் 12 முதல் 17 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய ஜோன்சன் என்ட் ஜோன்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

ஜோன்சன் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 12 தொடக்கம் 17 வயதுடைய சிறார்களுக்கு பயன்படுத்தலாமா என பரிசோதனை செய்ய ஜோன்சன் என்ட்  ஜோன்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு அனுமதி கோரி குறித்த நிறுவனம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *