தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *