முசலி தேசிய பாடசாலையில் 2 மாடி கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு

மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட முசலி தேசிய பாடசாலையில் ஐ.எஸ்.ஆர்.சி அமைப்பின் நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (27) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ,வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.வரதீஸ்வரன் உற்பட அதிதிகள் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

-இதன் போது முசலி பிரதேசச் செயலாளர்,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *