
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையில் 1987ஆம் ஆண்டு இறால் பண்ணையில் பணி புரிந்தவர்களையும் அகதியாக இடம்பெயர்ந்து அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட 150 இற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை 2006 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் இடித்தழித்திருந்தது.
இதனால் இறந்தவர்களின் உறவுகளும் பொது மக்களும் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இடித்தழிக்கப்பட்ட தூபியினை ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் தனது சொந்த நிதியில் மீளவும் புனரமைப்பு செய்த நிலையில், கடந்த சில வருடங்களாக பலர் வருடா வருடம் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இப்போதைய அரசு இறந்த உறவுகளை அஞ்சலிங்கும் உரிமையையும் மக்களின் உணர்வுகளையும் மறுத்து பல முட்டுக்கட்டைகளை போட்டு இடையூறுகள் விளைவித்து வரும் நிலையில், இன்று பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரெலோவின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தலைமையில் ரெலோவின் உப தலைவர் நி.இந்திரகுமார் ரெலோவின் நிதிச் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம் ஆகியோர் மரணித்தவர்களை நினைவு கூர்ந்து தூபியில் சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



பயங்கரவாத தடை சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்! – மனோ எம்.பி. தெரிவிப்பு