யாழ். கலட்டிப் பிள்ளையார் கோவிலில் பட்டப்பகலில் உண்டியல்களை உடைத்து திருட்டு! SamugamMedia

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் கோவிலில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோவிலின் இரண்டு உண்டியல்களை உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (27) பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *